* கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ளார். எதிர் வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ள அவர், ‘கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுக வீரராக விளையாடப் போவதைப் போல உணர்கிறேன். அந்த விபத்துக்குப் பிறகு நான் சந்தித்த சவால்களை நினைத்துப் பார்க்கும்போது, மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போகிறேன் என்பதே மாயாஜாலம் போல நம்ப முடியாத அதிசயமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டியுள்ள இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41 வயது), தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ஓய்வு பற்றி இப்போது எதுவும் யோசிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.