இந்நிலையில் நேற்று விவசாயிகள், நில உரிமைதாரர்கள், சாகுபடிதாரர்கள், கூலித் தொழிலாளர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தங்களது வீடுகளில் பதாகைகள் வைத்தும் கருப்புக்கொடி ஏற்றியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு 2013ம் ஆண்டு இழப்பீடு சட்டத்தின்படி மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடிதாரர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளது. அதை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், முட்டம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடிதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post எண்ணெய் நிறுவனம் கண்டித்து 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு appeared first on Dinakaran.