எழிலூர் அரசு பள்ளி ஆண்டு விழா

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 13: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பையன், பெற்றோர் ஆசிரியர் கழக கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனகவல்லி, நேமம் வேதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுபாஷ் வரவேற்றார். விழாவில் எம்எல்ஏ மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க காசு வழங்கி பேசினார்கள். ஆசிரியர்கள் சுசீலா, சுமதி, மலர்விழி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களை தயார் செய்திருந்தனர். விழாவில் எழிலூர் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம பெரியவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

The post எழிலூர் அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: