காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது மணடலம் ரங்கசாமி குளம் பகுதியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, புதிய பயணியர் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர் தசரதன், வெங்கடேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வர்த்தக அணி மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன், 2வது மண்டல குழு தலைவர் சந்துரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துசெல்வம், சுப்பராயன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் கமலக்கண்ணன் கார்த்திக், வட்ட நிர்வாகிகள் ரவி, ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: