பஹரம்பூர் தொகுதியில் மம்தா போட்டியிட விருப்பம் இல்லை என்றால், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியை போட்டியிட அனுமதிக்க வேண்டும். இத்தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை, முதல்வர் மம்தாவின் தோல்வியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக மம்தா செயல்பட மாட்டார். மோடியையோ அல்லது பாஜகவையோ எதிர்த்து மம்தா போட்டியிட மாட்டார். ‘இந்தியா’ கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால், மோடி மகிழ்ச்சியாக இருப்பார்’ என்று கூறினார். பஹரம்பூர் தொகுதி எம்பியாக 5 முறை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பஹரம்பூர் தொகுதியில் தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடுங்கள்! மம்தாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவால் appeared first on Dinakaran.