குஷ்பு உருவ பொம்மை எரிக்க முயன்று திமுக மகளிர் அணியினர் போராட்டம்

திருப்பூர்: திமுக மகளிர் அணி மாநில பிரச்சார குழு செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி ஆனந்தி முன்னிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநக துணை செயலாளர் தேவி முருகேசன் மாநகர அமைப்பாளர் கெளரி ஏராளமான கலந்து கொண்டனர். இதில் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டி திமுக மகளிர் அணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குமரன் சிலை அருகே திரண்டு குஷ்பு உருவ பொம்மை மற்றும் புகைப்படத்தை எரிக்க முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். இதில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post குஷ்பு உருவ பொம்மை எரிக்க முயன்று திமுக மகளிர் அணியினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: