கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பீட்டிலான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 400 மீட்டர் தூரத்திற்கு நடை மேம்பாலம் அமைகிறது. தொடர்ந்து சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய காலநிலை பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பீட்டிலான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: