முதல்வர் பிறந்தநாள் விழாவில் மகளிருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார்

ஆலந்தூர்: ஆலந்தூர் 160வது வட்ட திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, உலக மகளிர் தின விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலந்தூர் ஜால் தெருவில் உள்ள அரசினர் பள்ளியில் நடந்தது.
கவுன்சிலர் பிருந்தா ஸ்ரீ முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், பகுதிச் செயலாளர் பி.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் முரளிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம், சுருள் வீச்சு, வால்வீச்சு, பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்சிகள் நடந்தன. விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தலைமை ஆசிரியர் சத்யநாராயணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், பூபாலன், பகுதி நிர்வாகிகள் சீனிவாசன், பாபு குமார், காமராஜ், எம்.வி.குமார், ஸ்ரீதர், கலாநிதி குணாளன், வி.ராஜா, ஷாகிம் ஷா, தீபக், சரவணன், ஹார்பர்குமார், தீனன், சண்முகம். காஜாமொய்தீன், வாசீம்கான், பால அமுதநாதன், விக்கி, சாந்தி விமலா, நலச்சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

The post முதல்வர் பிறந்தநாள் விழாவில் மகளிருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: