ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில் ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்கள் போராட்டம் கடந்த 8ம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
The post இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.