பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்: குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர்மல்க கோரிக்கை

டெல்லி: பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் பற்றி பிரதமர் மோடிக்கு நினைவூட்டுகிறேன் என சங்க்ரங் சோரன் கூறியுள்ளார்.

எம்எஃப்என் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரனிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்பேட்டியில் அவர் “பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்” என கண்ணீர்மல்க கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்து அவர் கூறியதாவது; “மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. அங்கு மக்கள் செத்து மடிகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளன.

குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க, மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்” என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்: குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் கண்ணீர்மல்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: