அரசு பள்ளியில் நூலகம் திறப்பு

 

தேன்கனிக்கோட்டை, மார்ச் 11: தேன்கனிக்கோட்டை அருகே, தொட்டமஞ்சி ஊராட்சி தொட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆர்டிசி தொண்டு நிறுவன செயலாளர் கௌரி தலைமை தாங்கினார். இயக்குநர் ஜோசப் ஸ்டான்லி, ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் மற்றும் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர். உலக மகளிர் தினம் மற்றும் பெண்கல்வியின் முக்கியத்துவம், இளம் வயது திருணம் தடுப்பு குறித்து விழிப்வுணர்வு ஏற்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, தொட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொட்டமஞ்சி ஊராட்சி தலைவி கமலா, யோகா பேராசிரியர் பாஞ்சாலி, அங்கன்வாடி அமைப்பாளர் சிவகாமி, ராமி, தொட்டூர் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, பெல்லட்டி தலைமை ஆசிரியர் ஜெயபாஸ்டியன் ஏசுராஜ், முருகேசன், சமூக ஆர்வலர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் நூலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: