கார் கண்ணாடி உடைத்து லேப்டாப், செல்போன் திருட்டு திருவண்ணாமலையில் துணிகரம் சாலையோரம் நிறுத்தி இருந்த

 

திருவண்ணாமலை, மார்ச் 11: திருவண்ணாமலையில் சாலையோரம் நிறுத்தி இருந்து கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் செல்போன் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தண்டராம்பட்டு பழைய தீயணைப்பு நிலைய தெருவை சேர்ந்தவர்சம்பத் மகன் ரமேஷ்(31). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று சென்னைக்கு திருவண்ணாமலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஒரு கடையில் இளநீர் குடித்துவிட்டு மீண்டும் காருக்கு திரும்பினார்.அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.காருக்குள் வைத்திருந்த லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கார் கண்ணாடி உடைத்து லேப்டாப், செல்போன் திருட்டு திருவண்ணாமலையில் துணிகரம் சாலையோரம் நிறுத்தி இருந்த appeared first on Dinakaran.

Related Stories: