அதிமுகவினர் என் முதுகில் குத்தி தோற்கடித்துவிட்டனர்: ஜெயலலிதா இருந்தால் சுட்டு இருப்பார் வெகுண்டெழுந்த ஏ.சி.சண்முகம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்கூட்டம் தார் வழிப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது: அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் (திமுக) சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை என்னை இந்த தொகுதியில் எம்.பியாக்குகிறேன் என நிற்க வைத்து அதிமுகவினர் என் முதுகில் குத்தி தோற்கடித்துவிட்டனர்.

அதிமுகவிற்கு விழ வேண்டிய ஓட்டுக்களை அதிமுகவினரே வேறு கட்சிக்கு மாற்றிவிட்டனர். எம்ஜிஆர் இருந்தால் இவர்களை விட்டிருப்பாரா? அம்மா இருந்தால் இவர்களை சுட்டு விட்டிருப்பார். நான் ஜெயித்து மந்திரியாகி விடக்கூடாது என்பதற்காகவே அதிமுகவினர் அது போல் செய்துவிட்டனர். அதனால் தான் நல்லதோ கெட்டதோ மோடியிடம் சென்று விட்டேன்.

ஜெயித்தால் மோடி எனக்கு மந்திரி பதவி கொடுப்பார். இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது பதவிக்கொடுப்பார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நிருபர்களிடம் ஏ.சி.சண்முகம் கூறுகையில், ‘கமல் அழகாக ராஜ்யசபா சீட் வாங்கிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் ெசய்ய உள்ளார். கமலஹாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.

The post அதிமுகவினர் என் முதுகில் குத்தி தோற்கடித்துவிட்டனர்: ஜெயலலிதா இருந்தால் சுட்டு இருப்பார் வெகுண்டெழுந்த ஏ.சி.சண்முகம் appeared first on Dinakaran.

Related Stories: