விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சிறந்த அணிவகுப்பு நடத்திய சவுரியன் தாபாவுக்கு தங்கப்பதக்கமும், ஒட்டுமொத்த பரிசான வீரவாள் மற்றும் வெள்ளி பதக்கம் ஆர்யன் ஷாஹிக்கும், வெண்கலப்பதக்கத்தை தமிழ்நாட்டை சேர்ந்த சரண்யாவிற்கும் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி வழங்கி பாராட்டினார். இதைதொடர்ந்து பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் மிடுக்கான நடையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். 3 ஹெலிகாப்டரில் இருந்து வண்ண மலர் தூவப்பட்டது.
வெளியே வந்த இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது துப்பாக்கிகளை உயர்த்தி கோஷ மிட்டனர். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இளம் ராணுவ அதிகாரிகளின் தோள்பட்டையில் மூடப்பட்டிருந்த நட்சத்திர சின்னத்தை அவர்களின் பெற்றோர்கள் திறந்து பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
The post பரங்கிமலை மையத்தில் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா அணிவகுப்பு: விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி பார்வையிட்டார் appeared first on Dinakaran.