நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி சார்பில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், தடுப்பு ஆர்ச்சுகள்

*நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் திறந்து வைத்தார்

நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ரூ.22 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பாதுகாப்பு தடுப்பு ஆர்ச்சுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் திறந்து வைத்தார். தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் சமூக பாதுகாப்பு நிதி பங்களிப்புடன் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் பக்தர்கள் வரிசையாக செல்ல வசதியாக பாதுகாப்பு தடுப்பு ஆர்ச்சுகள் அமைக்கப்பட்டது.

அதுபோல் அம்பாள் சன்னதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் புதிதாக அமைக்கப்பட்டது. இவற்றை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், ரிப்பன் வெட்டி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முன்னதாக கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் பரணிதரன் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லையப்பர் கோயிலில் டிஎம்பி சார்பில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், தடுப்பு ஆர்ச்சுகள் appeared first on Dinakaran.

Related Stories: