பெங்களூரு: குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த ராமேஸ்வரம் கஃபே ஒரு வாரத்திற்கு பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் உணவகம் திறக்கப்பட்டது. உணவகத்திற்கு வருவோரை மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.