நடுநிலை பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு, மார்ச் 9: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த, 25 மாணவ, மாணவிகளுக்கு மாலை, கிரீடம் அணிவித்து, கலெக்டர் அருண்ராஜ் உற்சாகமாக வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வேண்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒன்றாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட 25 புதிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், அனைவருக்கும், கிரீடம் மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களில், ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுத பழக வைத்து கலெக்டர் மழலைகளின் கல்வியை துவக்கி வைத்தார். மேலும், புதிய மாணவ, மாணவிகளுக்கு சிலேட், பென்சில் எழுதுகோள் உள்பட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நடுநிலை பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: