வீட்டில் தீப்பற்றி பொருட்கள் நாசம்

மதுரை, மார்ச் 9: மதுரை தபால் தந்தி நகரை அடுத்த மீனாட்சி நகர் தபால் நிலையம் அருகே ஒரு வீட்டின மாடியில் குடும்பத்தினருடன் வசிப்பவர் நாகராஜ். இவர் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, பேரையூர் அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அவரது வீட்டின் பூஜை அறையில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. இதனால் அங்கிருந்து அதிக அளவில் கரும்புகை வெளியானது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தல்லாகுளம் தீயணைப்பு நியைத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்தபொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டில் தீப்பற்றி பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: