கொடைக்கானல் அரசு கல்லூரியில் ஆண்டு விழா

கொடைக்கானல், மார்ச் 9: கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. பேராசிரியர் அன்புமணி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் ஏஞ்சலின் தலைமை வகித்து ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் சதாசிவம் கலந்து கொண்டு மாணவிகளின் முன்னேற்றத்திற்கு தேவையானவை குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.

The post கொடைக்கானல் அரசு கல்லூரியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: