இந்நிலையில், பல்லாரியை சேர்ந்த துணி வியாபாரி ஒருவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவரை நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தீவிரமாக இயங்கிவருவதாக சந்தேகிக்கப்படுகிறது. மினாஜ் என்றழைக்கப்படும் முகமது சுலைமான் என்ற 26 வயது நபர் துணி வியாபாரி ஆவார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டுவந்தவர். சுலைமானுடன், ஷயான் ரஹ்மான் என்ற ஹுசைன், இக்பால் ஷேக் (23), சையத் சமீர் (19) ஆகிய நால்வரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பெங்களூரு குண்டுவெடிப்பு துணி வியாபாரி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.