ராஜஸ்தான் கோட்டாவில் சிவராத்திரி விழாவுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் காயம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் கோட்டாவில் சிவராத்திரி விழாவுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். காளிபஸ்தி என்ற இடத்தில் கலசத்தில் தண்ணீர் எடுத்த போது மின்சாரம் தாக்கியதில் 17 குழந்தைகள் காயம் அடைந்துள்ளது. சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய் உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை நேரில் சந்தித்து சபாநாயகர் ஓம்பிர்லா ஆறுதல் கூறினார்.

The post ராஜஸ்தான் கோட்டாவில் சிவராத்திரி விழாவுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: