சென்னை: சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர்.