வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்றவிழா

பெரம்பலூர், மார்ச் 8: வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்றவிழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று வணிக நிர்வாகவியல் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி துறைத் தலைவர் சத்தியசீலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) சேகர் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். விழாவில் மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மனோஜ், தனுஷ் ஆகியோர் மேனேஜ்மென்ட் கான்சப்ட் இன் திருக்குறள் என்ற தலைப்பில் படைப் பாக்கம் செய்த புத்தகம் வெளியிடப்பட்டது. துறை பேராசிரியர்கள் ஜான் விக்டர் மற்றும் செழியன், கவிதா மற்றும் மற்ற துறை த்தலைவர்கள், பேராசிரியர் கள், துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.

The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்றவிழா appeared first on Dinakaran.

Related Stories: