₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில், குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு வீதி, வெங்கட்ராமன் தெரு, சின்னசாமி நாயுடு தெரு 2வது கிராஸ், நரசிம்மன் தெற்குத் தெரு 1,2,3 ஆகிய குறுக்கு தெருக்கள் மற்றும் நெசவாளர் நகர் 3வது கிராஸ் ஆகிய பகுதிகளில் ₹72லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய தார் சாலை பணிக்கான பூமி பூஜை, தர்மபுரி நாட்டாமைபுரத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை வகித்து, புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் நாகராஜ், திமுக நகர செயலாளர் நாட்டான் மாது, நகர நிர்வாகிகள் முல்லைவேந்தன், அன்பழகன், அழகுவேல், சுருளிராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி appeared first on Dinakaran.

Related Stories: