பின்னர் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பேசியதாவது:
நாட்டில் அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இது தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நமது மாநிலம் 2வது இடத்திற்கு முன்னேற முக்கிய காரணம். அனைவரையும் வழி நடத்தும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. தாய்மார்கள் தான் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து மரபுகளை அழியாமல் பாதுக்காக்கிறார்கள். பெண்களை மதிக்க அனைவருக்கும் வீடுகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post பெண்களை மதிக்க வீடுகளில் கற்றுக்கொடுக்க வேண்டும்: பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அறிவுரை appeared first on Dinakaran.