நிலக்கோட்டை பொட்டிகுளத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை

நிலக்கோட்டை, மார்ச் 8: நிலக்கோட்டை ஒன்றியம், மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொட்டிகுளம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி, பழநி எம்எல்ஏவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐபி.செந்தில்குமாரின் வழிகாட்டுதலின்படி வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன் முயற்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் தலைமை வகித்து அங்கன்வாடி மைய கட்டிட பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செல்வக்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், ஜெயப்பிரியா தேவநாதன், அரசு ஒப்பந்ததாரர் காட்டுராஜா, மாணவர் அணி அமைப்பாளர் கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பதினெட்டாம்படி, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ஆரோக்கியம், நிர்வாகிகள் பெனிட், ரித்தீஷ், ஊர் முக்கியஸ்தர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை பொட்டிகுளத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: