வருவாய்த்துறையினர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், மார்ச் 8: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளைத்தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், மாவட்ட பொருளாளர் ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை, இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதிதிருத்த ஆணைகளை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.27 முதல் தொடர் காலவரையாற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post வருவாய்த்துறையினர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: