பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மூன்று முறை எம்எல்ஏவான சர்தார் ரமேஷ் சிங் அரோரா நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தில் முதல் சீக்கிய அமைச்சர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். அரோராவிற்கு சிறுபான்மையினர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கிறிஸ்தவ சிறுபான்மையினரான காலில் தஹிர் சிந்துவுக்கும் பஞ்சாப் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மனித உரிமைகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

 

The post பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி appeared first on Dinakaran.

Related Stories: