திமுக தெருமுனை கூட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புது தெரு மற்றும் வாணிவிலாசபுரம் ஆகிய பகுதிகளில் பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை பேச்சாளர்கள் தமிழ் சாதிக், முரசொலி மூர்த்தி, சேலம் சுஜாதா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பேரூர் நிர்வாகிகள் சங்கரன், சஞ்சய் காந்தி, வாசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமாரன், ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திமுக தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: