மயக்கம் தெளிந்தவுடன், இதுபற்றி இளம்பெண் கேட்டபோது, ‘‘உன்னை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதுபற்றி வெளியில் சொன்னால் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்,’’ என இந்திரஜித் மிரட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோ வைத்து அடிக்கடி மிரட்டி அந்த பெண்ணிடம் பணம், நகை கேட்டு சித்ரவதை வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அப்பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பலாத்காரம், மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து, இந்திரஜித்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், முகப்பேர் பகுதியில் பதுங்கி இருந்த இந்திரஜித்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கணவனை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது: வீடியோ எடுத்து தொடர்ந்து சித்ரவதை செய்தது அம்பலம் appeared first on Dinakaran.