100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்த பிறகு வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோரிக்கை மனுவை சத்யபிரத சாகுவிடம் அளித்துள்ளோம். வட இந்திய மாநிலங்களில் இன்றும் மின்னணு எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் கட்சிகளிடையே உள்ளது என்று தெரிவித்தார்.

The post 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: