இதனைத் தொடர்ந்து, சின்னமலை, வெங்கடாபுரம் பகுதியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, மேற்கு மாம்பலம், அண்ணாமலை நகர், 3வது தெருவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பின்னர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர்.காலனி, 3வது தெருவில் மேயர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.37 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு அரங்கத்தை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மேயர் திருமதி ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதிப்பிற்குரிய துணை மேயர் மு. மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர். துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப.சுப்பிரமணி, எம்.ஸ்ரீதரன், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அடையாறு மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.