இதில் சம்மன் பெற்ற சி.வி.சண்முகம் இன்று (5ம் ேததி) நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார். இந்த வழக்கை மூன்றாவதாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பூர்ணிமாவிடம், சிவி.சண்முகத்தின் வழக்கறிஞர் ராதிகா செந்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மூன்று மாதங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி வருகிற 19ம் ேததி அன்று வக்காலத்து மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 19ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.