தென்காசி: கொக்குகுளத்தில் பட்டாசு தயாரித்தது தொடர்பாக விஏஓ உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் சதீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக விஏஓ சந்தான பூபதி, உதவியாளர் மாரியப்பனை கோட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்தார்.