இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மேடவாக்கம், செங்கல்பட்டு அணி வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் கோப்பையும், மற்றும் 3 இடம் பிடித்த படப்பை பிரதர்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் கோப்பையும், 4 ம் இடம்பிடித்த முடிச்சூர் ஜானி பிரதர்ஸ் அணிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. மேலும், இந்த போட்டியில் கலந்துக்கொண்ட அணிகள் அனைத்திற்கும் ஆறுதல் ஊக்கத்தொகையாக தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டன. இந்த பரிசு மற்றம் கோப்பைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். விழாவில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணை தலைவர் அன்புச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கைப்பந்து போட்டி முதல் இரண்டு இடங்களை பிடித்த செங்கல்பட்டு அணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசுகளை வழங்கினார் appeared first on Dinakaran.