திருமாவளவன் பேட்டி எங்கள் மீதான அதிமுகவின் கரிசனத்தில் உள்நோக்கம்

சென்னை : சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த காலத்தில் நடந்தது போல ஏழு எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தும் நடைமுறையை கைவிட வேண்டும், அகில இந்திய அளவில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் தேர்தலை முடிக்க வேண்டும், வாக்கு பதிவாகிற நாளுக்கும், வாக்குகளை எண்ணும் நாளுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பது ஏற்புடையதல்ல.

மூன்று கட்டமாக தேர்தலை நடத்தி, வாக்கு பதிவாகிற நாளிலிருந்து வாக்கு எண்ணப்படும் நாள் வரை இரண்டு வார இடைவெளி இருந்தால் போதும் போன்ற தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோளாக முன் வைத்திருக்கிறோம். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒப்புகை சீட்டையும் இணைக்க வேண்டும். ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும்.

அதிமுகவோடு இருக்கக்கூடிய கட்சிகள் சிதறி கிடக்கின்றன முதலில் அவர்களின் கூட்டணியை உறுதி செய்யட்டும், எங்கள் மீது இருக்கிற கரிசனம் என்றாலும், அவர்களின் அணுகுமுறையில் ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகள் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணியில் இந்தியா கூட்டணியில் பயணிப்போம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

The post திருமாவளவன் பேட்டி எங்கள் மீதான அதிமுகவின் கரிசனத்தில் உள்நோக்கம் appeared first on Dinakaran.

Related Stories: