இந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் செவ்வாய், சனிக்கிழமை தவிர, வாரத்தில் 5 நாட்களுக்கு மாலை 6.50 மணியளவில் சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து கிளம்புகிறது. அன்று நள்ளிரவு குவைத் சென்று அடைகிறது. பின்னர் அங்கிருந்து மறுநாள் அதிகாலை புறப்பட்டு, காலை 6.35 மணியளவில் சென்னை விமானநிலையத்தை வந்தடைகிறது.தற்போது இந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இந்த கூடுதல் நேரடி விமான சேவைக்கு பயணிகளிடையே வரவேற்பை பொறுத்து, விரைவில் தினசரி நேரடி விமான சேவையாக இயக்கப்பட இருப்பதாக ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இனி சென்னையில் இருந்து குவைத்துக்கு நேரடி விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு 5 விமானங்கள் இயக்கப்படுவதால், இச்சேவை மூலம் தொழில், வர்த்தகம் உள்பட பல்வேறு பணிகள் காரணமாக சென்று வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னையில் இருந்து இன்று முதல் குவைத்துக்கு கூடுதல் நேரடி விமான சேவை appeared first on Dinakaran.