இதுதவிர தனித்தேர்வர்கள் 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 5 நாட்கள் வரை இடைவெளி விடப்பட்டுள்ளது.
The post பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.