இந்த நிலையில், புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம் அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அந்த பதிவில்,
முதலமைச்சரைச் சந்தித்துப்
பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்
சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்
நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்
இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும்
தெளிவாய்த் தெரிந்தன
புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்
அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம்.. அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர்.. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!! appeared first on Dinakaran.