நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் உறுதிமொழி

 

பெரம்பலூர், மார்ச் 2: நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், வாக்கு செலுத்துவோம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு இயக்கம் நடந்தது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில், வாக்குரிமையை பயன்படுத்துவோம் வாக்குரிமை எங்கள் ஜனநாயக உரிமை, வாக்களிப்போம், பணமும் பொருளும் பெறமாட்டோம், எங்கள் வாக்கை விற்பது குற்றம் என்பதை அறிவோம், சாதி சமயம் பாராமல் இந்திய திருநாட்டின் மக்கள் நலனை காத்திட வாக்கு செலுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மாவட்ட துணைத்தலைவர்கள், கருணாநிதி மதியழகன், மற்றும் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் .மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Related Stories: