இதுகுறித்து பட்டரைவாக்கத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் போலீசார், கடந்த மாதம் ஆர்.கே.நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது திருமலையின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து குடோனை சோதனையிட்டபோது ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குடோனில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான திருமலையை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் திருமலை பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமை யிலான போலீசார் நேற்று சுற்றிவளைத்து திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு அரிசி கடத்தல் வழக்குகள் இருப்பதால் குண்டர்சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி திருமலை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.
The post வடசென்னை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.