மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை இந்த சாதனை எடுத்துக் காட்டுகிறது, மார்ச் மாதத்துக்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும், தொழில் வளர்ச்சிக்கு முதலமைச்சர் அளிக்கும் ஊக்கம் காரணமாக மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: