இதன் மூலம் பேருந்து நடத்துநர்கள் மின்னணு டிக்கெட் இயந்திரம் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், கார்டு மற்றும் யு.பி.ஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். அதன்படி, பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இந்தவிழாவில், கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கூகுள்-பே, போன் பே மூலம் செலுத்தலாம் அரசு பஸ்களில் மின்னணு பயணச்சீட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.