இதில் கிராமப்புற மக்கள் தொழிற்சாலை முன்பு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது, சிப்காட் போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தொழிற்சாலையை 10 தினங்களுக்கு மூடி வைக்குமாறு உத்தரவிட்டனர். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ராமாச்சேரி கண்டிகை சாலையிலிருந்து சிப்காட் சென்றது தொழிற்சாலையிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேறி கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமப்புற மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மேற்கண்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று வலியுறுத்தினர். இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
The post தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.