அதேபோல் பாதுகாப்புக்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொங்கலிட்டு முடிந்தவுடன் மாலையில் பெண்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தம்பானூர் ரயில் நிலையம் அருகே பட்டம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு 2 இளம்பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று 2 பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து செயினை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மீனாட்சி, மாரி என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் 2 பேரையும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆற்றுகால் பொங்கல் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறித்த தூத்துக்குடி இளம்பெண்கள் கைது appeared first on Dinakaran.