செந்துறை வடக்கு ஒன்றியத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ஆலோசனை கூட்டம்

அரியலூர், பிப். 27: அரியலூர் மாவட்டம் செந்துறையில், மாவட்ட கழக செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலோடு, செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் தலைமையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை வடக்கு ஒன்றியம் ஆர்.எஸ்.மாத்தூர் தனியார் திருமண மஹாலில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் குன்னம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்த குமார் முன்னிலையில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள், வாக்கு சாவடி பணிக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள்(BLC) கலந்து கொண்டனர். கூட்டத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்கின்ற திண்ணை பிரச்சாரம் செய்தல்.. கழகத் தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்., கழக ஆக்க பணிகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திவ் கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

The post செந்துறை வடக்கு ஒன்றியத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: