ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.27: கரூரில் எல்பிஎப் தொழிற்சங்கத்தினர், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடந்த, துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி விவசாயிகள் பலியாக காரணமான ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் போஸ்ட் ஆபீஸ் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எஃப். மாவட்ட தலைவர் அண்ணா வேலு தலைமை தாங்கினார். செயலாளர் அப்பாசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன், சிஐடியு ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: