சதுரங்க பேட்டை அரசு பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சதுரங்கப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேசாம்சன் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றி பள்ளியின் இந்த ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு காட்டினார். உதவி தலைமை ஆசிரியை சுஜித்ரா ஆண்டறிக்கையை வாசித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டில்லிபாபு, துணைத் தலைவர் சுரேஷ், மோவூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, மேலாண்மை குழு துணை தலைவி நதியா, உறுப்பினர் மனோகர், கல்வி தன்னார்வலர்கள் சிவசங்கரன், பாலமுருகன், முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலர் சுகானந்தம், பூண்டி ஒன்றிய குழு துணை பெருந்தலைவி மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

தமிழாசிரியை சங்கீதா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை விஜிதா நன்றி கூறினார். இந்த விழாவை முன்னிட்டு பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், தத்ரூபமான ஒப்பனையுடன் கடவுள் நடனங்கள், கராத்தே செயல் முறைகள், யோக நிகழ்வுகள், நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை மற்றும் இலக்கிய நாடகங்கள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன.

The post சதுரங்க பேட்டை அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: