இந்நிகழ்ச்சிக்காக, மதுராந்தகம் அருகே மையூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு-சல்சா தம்பதி, தங்களின் 3 வயது பெண்குழந்தை செல்வியுடன் வந்து தங்கியுள்ளனர். இரவு சிறுமி செல்வி திடீரென காணாமல் போனாள். புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீசார், சிறுமியை தேடி வந்தனர். நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு சற்று தூரத்தில் சிறுமி வழி தெரியாமல் அழுது கொண்டிருப்பதை ரோந்து போலீசார் கண்டறிந்தனர். காவல் நிலையத்துக்கு மீட்டுக் கொண்டு வந்து உணவு, தண்ணீர் வழங்கினர். தகவலறிந்து வந்த பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
The post மாமல்லபுரம் மாசி மக விழாவில் காணாமல் போன சிறுமி மீட்பு appeared first on Dinakaran.