இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, யார் யாருக்கெல்லாம் பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post யார், யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை? வழக்கு தொடர்ந்தவர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.